திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்
முண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்* உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே !
 

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
படுகடலில் அமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருதம் இறநடந்த பொற்குன்றினை*
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
 

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்