ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
ஏனோ மனமே இனிமேலாகிலும்...
பிரிவு:ஆசார்ய வைபவம்
ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !
வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)
திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை...
ராமானுஜர் கிளிக்கண்ணி !
பிரிவு:ஆசார்ய வைபவம்
ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி !...
ஈயாடுவதோ கருடர்க்கெதிரே...
பிரிவு:ஆழ்வார்கள்
ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம். திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே... ஈயாடுவதோ கருடர்க்கெதிரே ! இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ ! நாயாடுவதோ நரகேசரி முன் ? அழகூர்வசி...
கண்ணபுரத்தென் கருமணியே !
அருளியவர் :குலசேகர ஆழ்வார்
பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஏப்ரல் 2013
பிரிவு:பாடசாலை செய்திகள்
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013
(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு...

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !
வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை பஜித்தாராம் !
திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்
திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)
அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை
அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !
துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை
தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)
"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !
வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு
உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !
பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !
வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்
உய்யும் வழி அதுவே --- கிளியே !
எங்கள் இராமானுசனடி -- அது
யதிராஜன் திருவடியே !

